Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கல்வியை விட பக்திதான் முக்கியம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இத்தகவல் தவறானது என்று அஇஅதிமுக தரப்பும், நியூஸ் தமிழ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2026 பொதுத்தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பயணம் ஜூலை 23ல் பட்டுக்கோட்டையியில் நிறைவுறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள்தான் கட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளை அல்ல” என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
கல்வியை விட பக்திதான் முக்கியம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் கோயம்புத்தூரில் நடந்த பரப்புரையில்“அஇஅதிமுக ஆட்சியில் பல கல்வி நிலையங்களை திறக்கப்பட்டது; அந்நிறுவனங்கள் அனைத்தும் அரசு நிதியில் கட்டப்பட்டது; ஆனால் திமுக அரசு மக்கள் கோவில்களை அபிவிருத்தி செய்ய கொடுத்த அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரி கட்டுகின்றது; இது ஒரு சதிச்செயலாக மக்கள் நினைக்கின்றனர்” என்று ஈபிஸ் பேசி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து அவர் பேசுகையில் “கல்விக்காக கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை; கல்வி என்பது முக்கியம்; ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு நாட்டிற்கு கல்வி முக்கியம். ஆனால் அந்த கல்வி அரசாங்க நிதியிலிருந்தே கொடுக்கப்படவேண்டும்” என்று பேசி இருப்பதை காண முடிகின்றது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் தவறானவை என்று அறிய முடிகின்றது.
இந்த பரப்புரையின் முழுப்பகுதி நியூஸ் ஜே யூடியூப் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (ஜூலை 8) பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. மேற்கூறிய கருத்தானது 20:07 நேரத்தில் இடம்பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக்கொண்டு பேசுகையில், அவரும் “இத்தகவல் தவறானது” என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் தமிழ் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து நியூஸ் தமிழின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் ராஜேஷை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை நியூஸ் தமிழ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
கல்வியை விட பக்திதான் முக்கியம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video from NewsJ, dated July 8, 2025
Phone Conversation with Kovai Sathyan, National Spokesperson, AIADMK
Phone Conversation with Rajesh, Digital Head, News Tamil 24X7
Ramkumar Kaliamurthy
December 4, 2025
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
October 14, 2025