சனிக்கிழமை, ஜூலை 6, 2024
சனிக்கிழமை, ஜூலை 6, 2024

HomeFact Checkபாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றார். சி.வி.சண்முகம்.

Fact: வைரலாகும் தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும் நியூஸ் தமிழ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

“புரட்சித் தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பாமகவிற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பாஜகவோடு கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்” என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் தமிழ் ஊடகத்தின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் முன்னதாக அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் அந்நிறுவனம் வைரலாகும் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நியூஸ் தமிழின் ஆசிரியர் தினேஷை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் “வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது. அந்த கார்டை நியூஸ் தமிழ் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தொடர்ந்து தேடுகையில், “அதிமுகவின் நிலைப்பாடு தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே.! விழுப்புரம் மாவட்ட செயலாளர் அண்ணன் #CVe_சண்முகம்_MP அவர்களின் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தவறுதலாக பதிவிடும் சமூக விரோதிகளுக்கு கண்டனம்..! இது சமூக விரோதிகளால் பரப்பப்படும் தவறான அறிக்கை..!” என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள தகவல் பொய்யானது என்று விழுப்புரம் அதிமுக ஐடி விங்கின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்த நியூஸ்கார்டை உருவாக்கி பரப்பியவர்களுக்கு எதிராக சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து திண்டிவனம் போலீசாரிடம் புகாரளித்திருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Dinamalar

Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

Conclusion

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அதிமுக தரப்பும் நியூஸ் தமிழ் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post by Villupuram IT Wing, AIADMK, Dated July 03, 2024
Report from Dinamalar, Dated July 04, 2024
Phone Conversation with Dinesh, Editor, News Tamil 24×7


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular