செவ்வாய்க்கிழமை, ஜூலை 2, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூலை 2, 2024

HomeFact Checkமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடினாரா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடினாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: +2 ல Fail லான பசங்க கிட்ட போன்ல பேசி நம்பிக்கை குடுத்துகிட்டு இருக்கார்யா எங்க தலைவர்

Fact: வைரல் புகைப்படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருப்பது பிரக்ஞானந்தா ஆகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”+2 ல Fail லான பசங்க கிட்ட போன்ல பேசி நம்பிக்கை குடுத்துகிட்டு இருக்கார்யா எங்க தலைவர்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from X @Hereprak

X Link

Screenshot from Facebook/Katterumbu

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Fact Check/Verification:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடியதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது முதல்வர் பேசிக்கொண்டிருப்பது இளம் செஸ் விளையாட்டு வீரரான பிரக்ஞானந்தா என்பது நமக்குத் தெரிய வந்தது.

”உலக சாம்பியன் செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.” என்று கடந்த ஆகஸ்ட் 25, 2023 ஆம் செய்தி வெளியாகியுள்ளது. இதில், தற்போது வைரலாகும் புகைப்படமும், வீடியோவும்  இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவே தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் தோல்வியடைந்த மாணவருடன் உரையாடுவதாகப் பரவி வருகிறது.

 Also Read: மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

Conclusion

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் +2வில் பெயிலான மாணவனுடன் செல்போனில் உரையாடியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report By ETV Bharat, Dated August 25, 2023
YouTube Video From, ABP Nadu


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular