வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkமுதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை மூடிய டீக்கடைக்காரர் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

முதல்வர்
Source: Facebook

கடந்த நவம்பர் மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது பூவிருந்தவல்லி அருகே டீக்கடை ஒன்றில் டீ அருந்தினார். குறிப்பிட்ட அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவியது.

Source: YouTube
Source: Dinamani

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

முதல்வர்
Source: Facebook

Facebook Link

முதல்வர்
Source: Facebook

Facebook Link

முதல்வர்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்றாரா அமைச்சர் கே.என்.நேரு?

Fact Check/Verification

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ் கார்டினை பார்த்தபோதே அது கேலிசெய்யும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆனால், அதனை உண்மை என்று நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Source: Twitter

Facebook Link

எனவே, குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஏபிபி நாடு பெயரில் பரவிய நிலையில் அதுகுறித்து ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜ் பிரபாகரிடம் கேட்டோம். அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.

Conclusion

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Abp Naadu

Dinamani

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular