செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkகாங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதா?

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கர்நாடகாவில் சாவர்க்கர் ஓவியத்தை மெட்ரோ ரயில் நிலையத்தில் வரைந்த காங்கிரஸ்

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022, பாஜக ஆட்சியில் வரையப்பட்டதாகும்.

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் “சாவர்க்கர்” அல்ல! நான் ராகுல் “காந்தி” -ராகுல் காந்தி
~அவன் கெடக்குறான் மயிலாண்டி! நீ சாவர்க்கர் போட்டோவ மாட்டு -கர்நாடக காங்கிரஸ் அரசு”
என்று அந்த புகைப்படம் பரவி வருகிறது.

காங்கிரஸ்
Screenshot from X @iam_nithankrish

Archived Link

Screenshot from Facebook/wtamils

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?

Fact Check/Verification

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022ஆம் ஆண்டே இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன என்பது நமக்கு உறுதியாகியது. கடந்த ஆகஸ்ட் 16, 2022ல் Deccan Herald, Asianet உள்ளிட்ட ஊடகங்களில் இப்புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், News 18 Kannada, Indian express தளங்களிலும் இப்புகைப்படம் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த ஓவியங்கள் சித்ரகலா பரிஷீத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், அங்குள்ள கலைஞர்களே  வீரர்களின் ஓவியங்களை தேர்வு செய்து அளித்ததாகவும் அதிகாரி ஒருவர் டெக்கான் ஹெரால்டிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஓவியங்கள் வைக்கப்பட்ட 2022ஆம் ஆண்டு கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. மே 2023 தேர்தலுக்கு பிறகே அங்கு காங்கிரஸ் ஆட்சி உருவானது. எனவே, இந்த ஓவியம் பாஜக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report From, Deccan Herald, Dated August 16, 2022
Report From, Kannada News 18, Dated August 17, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)


 

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular