Thursday, March 13, 2025
தமிழ்

Coronavirus

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாட்டிற்கு புதிய நடைமுறைகளா?

banner_image

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் 144 தடை உத்தரவு உட்பட புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்தி ஒன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஏப்ரல்
Source: Whatsapp

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல்

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வாட்ஸ்அப் செய்தி ஒன்று வைரலாகிறது.

ஏப்ரல்
Source: Whatsapp

வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய நடைமுறைகள் வெளியாகவிருப்பதாக பரவும் செய்தியறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து அறிய அரசு சார்ந்த முக்கிய சமூக வலைத்தள அதிகாரப்பூர்வ பக்கங்களை ஆராய்ந்தோம்.

அத்தேடலின் முடிவில், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட இந்த வைரல் செய்தி குறித்த மறுப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Source: Twitter

Archived Link: https://archive.ph/1fWv2

அதில், “கோவிட்-19க்கான லாக்டவுன் குறித்த போலிச்செய்திகளை நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த செய்தியறிக்கை போலி என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய நடைமுறைகள் அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகப் பரவும் செய்தியறிக்கை போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்

Result: Fabricated

Our Sources:

Greater Chennai corporation: https://twitter.com/chennaicorp/status/1379423646238666752?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.