Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, ”ஆர்டர் கொடுக்க
மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?
மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா?” என்பதாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொல்.திருமாவளவன் பகிர்ந்த வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தொல்.திருமாவளவன் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்ற வீடியோவில் nba 24×7 என்று இடம்பெற்றிருந்த நிலையில் இதுகுறித்து நாம் nba 24×7 Tamil யூடியூப் சேனலில் ஆராய்ந்தோம்.
முழுமையான வீடியோவில் அண்ணாமலை, “பார்டரில் இருக்கிற ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் இங்கிருந்து ஒரு செய்தியை சொல்லுகின்றோம். அரசு உங்களுடன் இல்லாவிட்டாலும் கூட நாங்கள் உங்கள் கூட இருக்கிறோம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்கள் கைகளில் துப்பாக்கி இருக்கிறது. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டுத்தள்ளிவிட்டு வாருங்கள். மீதியை பாஜக கட்சி தமிழகத்தில் பார்த்துக்கொள்ளும். எதற்கும் பயப்படாமல் எல்லையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்நாடு படைவீரரும் சொல்வீர்கள்,சொல்ல வேண்டும் இந்திய ராணுவத்தின் பேட்ஜைப் பார்த்து, “The Name in the front is more important than the name in the back” என்று. ஏனெனில், முன்புறம்தான் இந்திய ராணுவம் என்கிற பெயர் இருக்கும்; பின்புறம்தான் நம்முடைய பெயர் இருக்கும். பக்கத்து மாநிலத்தினர் அங்கு நம்முடைய ராணுவ வீரர்களிடம் “உங்கள் ஊரில் இந்தளவு தலைவர்கள், தொண்டர்கள், தமிழ் மக்கள் உங்களுக்காக ஆதரவாக இருக்கிறார்களா?” என்று கேட்க வேண்டும். இதை சொல்ல வேண்டிய கட்டாயமும், கடமையும் எங்களுக்கு இருக்கிறது” என்று பேசியிருந்தார்.
உள்ளூர் தகராறில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவிற்காக நடைபெற்ற பாஜகவின் உண்ணாவிரதம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தில் அண்ணாமலை இவ்வாறு பேசியிருந்தார்.
இந்த வீடியோவில் இருந்தே ஒரு பகுதியை கட் செய்து, ராணுவ வீரர்கள் குறித்து அண்ணாமலை பேசியதை அவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: Fact Check: நீட் தேர்வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதா தமிழக அரசு? உண்மை என்ன?
அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொல்.திருமாவளவன் பகிர்ந்த வீடியோ முழுமையான காணொளியில் இருந்து எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, nba 24×7, Dated February 21, 2022
YouTube Video From, Red Pix 24×7, Dated February 21, 2022
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025