வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckFact Check: நீட் தேர்வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதா தமிழக அரசு? உண்மை என்ன?

Fact Check: நீட் தேர்வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதா தமிழக அரசு? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நியூஸ் 7 தமிழ், தந்தி டிவி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இதுகுறித்த பாதி செய்தியை மட்டும் பகிர்ந்த நிலையில், “நீட் தேர்வை தடை செய்யற ரகசியம் எங்ககிட்ட தான் இருக்குனு சொல்லீட்டு , இப்ப என்னடானா எல்லாம் வழக்கையும் வாபஸ் வாங்கறான்” என்பதாக அவர்களுடைய நியூஸ்கார்டுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தந்தி டிவி இச்செய்தி கார்டை நீக்கி விட்டது.

Screenshot from Facebook/raja.jkraja
நீட் தேர்வுக்கு
Screenshot From Facebook/nelveli.memes.9
Screenshot From Facebook/dhandapani.sankaran

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதா விகடன்?

Fact Check / Verification

நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்கிற சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.

தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது. ஏற்கனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக தேர்தலில் ஜெயித்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பட்டியலிடும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு.

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆளுநர் அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியிருந்தார். எனவே, நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு பிப்ரவரி 08, 2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றக்கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவது என்கிற மனுவாக நீட் விலக்கு தொடர்பான ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த ரிட் மனுவே இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அந்த மனுவை திரும்பப்பெற்ற தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 131இன் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அல்லது இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான ஒரிஜினல் சூட் வழக்கு மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

A Page From Original Suit against NEET Exam

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரிஜினல் Suit பதிவு செய்த உச்ச நீதிமன்ற தமிழக வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அதுகுறித்து அவர்,

“கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற்று, புதியதாக தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்விற்கு எதிரான வழக்கிற்காக ஒரிஜினல் Suit மனு தாக்கல் செய்துள்ளோம்.” என்று விளக்கமளித்தார்.

ஒரிஜினல் Suit மனு தாக்கல் செய்யப்பட்டதால், அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட Writ மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்கிற செய்தியே தமிழ்நாடு அரசு நீட்டுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றுவிட்டதாகப் பரவுகிறது.

Also Read: Fact Check: ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்ததாகப் பரவும் கர்நாடகா செய்தி!

Conclusion

நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதாக பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Phone Conversation With, Advocate Sabarish Subramanian, Dated February 25, 2023
News Report From, Hindustan Times, Dated February 19, 2023
News Report From, Live Law, Dated February 18, 2023
News Report From, Outlook, Dated February 19, 2023
News Report From, Puthiyathalaimurai, Dated September 13, 2021
News Report From, Law Street Journal
Report From, The New Indian Express
Twitter Post From, Live Law, Dated February 18, 2023
Report From, Deccan Herald
Report From, Rest The Case
Report From, Lagatar24 News
Twitter Post From, TN DIPR, Dated February 24, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular