சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckFact Check: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தாரா திமுக பிரமுகர்?

Fact Check: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தாரா திமுக பிரமுகர்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட்

இந்த நியூஸ்கார்டை பலரும் சமூக வலைத்தளத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@IndiraniSudala1
ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/Admk Vignesh
ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/Subramanian.agri

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Factcheck / Verification

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இத்தகவல் தந்தி தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி பரப்பப்படுவதால், தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில், ஆர்டிஓ அதிகாரி என கூறி வாகனங்களை மறித்து வசூல் வேட்டை… தேனியை சேர்ந்த திமுக பிரமுகர் கைது’ என்று தலைப்பிட்டு மார்ச் 9, 2021 அன்று செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த யூடியூப் தம்ப்னைல்(thumbnail) படத்தை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட்

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அவரும் ”வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது” என்பதை தெளிவுப்படுத்தினார்.

Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Youtube Post from Thanthi Tv Dated March 9, 2021
Phone Conversation with Vinothkumar, Thanthi Tv, Dated February 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular