சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkமாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா அவர்கள் கூறியதாகப்  புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மாமிசம் உண்பவர்கள் குறித்து எச்.ராஜா பேசியதாகப் பரவும் செய்தி

Fact Check/Verification

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரைக்குத் தடையிருந்தும், தடைகளை மீறித் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடைப்பெற்று வருகிறது.

இதற்காக விழுப்புரத்தில் 17/11/2020 அன்று நடந்தப் பொதுக் கூட்டத்தில் எச்.ராஜா அவர்கள் கலந்துப் பேசினார். இக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது, மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று பேசியதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்செய்தியானது நியூஸ் 7 தொலைக்காட்சியில் வெளிவந்ததாக நியூஸ் 7 நியூஸ்கார்ட் ஒன்று பரப்பப்படுகிறது.

https://www.facebook.com/narumugai.devi/posts/3689038177855530
https://www.facebook.com/sahaya.stalin.509/posts/380149583428706

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக நியூஸ் 7 நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டதா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.

இதற்காக நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்கள், இணையத் தளம், மற்றும் யூ டியூப் சேனல் ஆகியவற்றில் இதுக்குறித்துத் தேடினோம். அவ்வாறு தேடியதில் எச்.ராஜா அவர்கள் மாமிசம் உண்பவர்கள் குறித்து இவ்வாறு பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே ஆய்வின் அடுத்துக் கட்டமாக, வைரலாகும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

இவ்வாறு ஆய்வு செய்ததன் மூலம் வைரலாகும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டானது, எடிட் செய்யப்பட்டு போலியாகத் தயார் செய்யப்பட்டது என்கிற உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா அவர்கள்,  

“கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள்; ஆன்மீகத்தைக் கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள்.”

என்று பேசியுள்ளார். இக்கூற்றையே நியூஸ் 7 தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் நியூஸ்கார்டாக வெளியிட்டுள்ளது.

மேலேக் காணப்படும் நியூஸ்கார்டைத்தான் எடிட் செய்து, மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக விஷமிகள் பரப்பி வருகின்றனர் எனும் உண்மை நம் ஆய்வில் தெளிவாக விளங்குகிறது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாகப்  பரப்பப்படும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்பதையும், எச்.ராஜா இவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இச்செய்தியினை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Result: False

Our Sources

Twitter Profile: https://twitter.com/ChennaiViswa/status/1329030631079043072

Facebook Profile: https://www.facebook.com/narumugai.devi/posts/3689038177855530

Facebook Profile: https://www.facebook.com/sahaya.stalin.509/posts/380149583428706

News 7: https://twitter.com/news7tamil/status/1328721399624527873

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular