வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkபாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா?

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

வைரலானச் செய்தி

Fact Check/Verification

எஸ்.பி.பி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் கொரானாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

கொரானாவின் காரணமாக எஸ்.பி.பி அவர்கள் உயிரிழந்துவிட்டதாக வதந்தி ஒன்று கடந்தக் காலங்களில் பரவியது. ஆனால் அது பொய் என்று நம் நியூஸ்செக்கர் சார்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியை இங்கே காணலாம்: https://tamil.newschecker.in/coronavirus/sp-balasubramanyam-was-rumored-to-be-dead/

எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா கொரானா முழுமையாக நீங்க வேண்டும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையுலகினர் மற்றும் மக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி அவர்களுக்கு நோய் முழுமையாகி நீங்கி, கொரானா நெகடிவ் என்று பரிசோதனையில் தெரிய வந்ததாக செய்தி ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தினகரன், இந்து தமிழ், மற்றும் நக்கீரன் உள்ளிட்டத் தமிழின் முக்கியப் பத்திரிக்கைகளிலும் இச்செய்தி வெளியாயிருந்தது.

பாடகர் எஸ்.பி.பி. குறித்து நக்கீரனில் வந்தச் செய்தி.
எஸ்.பி.பி. குறித்து நக்கீரனில் வந்தச் செய்தி.
பாடகர் எஸ்.பி.பி. குறித்து இந்து தமிழில் வந்தச் செய்தி.
எஸ்.பி.பி. குறித்து இந்து தமிழில் வந்தச் செய்தி.
பாடகர் எஸ்.பி.பி. குறித்து தினகரனில் வந்தச் செய்தி.
எஸ்.பி.பி. குறித்து தினகரனில் வந்தச் செய்தி.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

ஊடகங்கள் வெளிவரும் இச்செய்தியைக் குறித்து நாம் ஆராந்தபோது வெளிவந்த இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று தெளிவாகியுள்ளது.

எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் ஊடகங்களில் வரும் செய்தியை முழுமையாக மறுத்துள்ளார். இதுக்குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நான் எப்போதும் மருத்துவர் குழுவுடன் ஆலோசித்து விட்டு மாலையில்தான் அப்பாவின் உடல்நிலைக் குறித்த அறிக்கையை வெளியிடுவேன். ஆனால் நான் காலையிலேயே அறிக்கை தரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.

அப்பா குறித்த எந்த தகவலும் முதலில் எனக்குதான் வரும். அதன்பின் நான்தான் அதை ஊடகங்களுக்குக் கூறுவேன். இன்று அப்பாவுக்கு கோவிட் 19 நெகடிவ் என்று சோதனையில் தெரிய வந்ததாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

அப்பாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் இன்னும் தீவிர சிகிச்சையில்தான்  உள்ளார். அவர் இன்னும் வெண்டிலேட்டரில்தான் வைக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சிகிச்சைக்கு சாதகமாகவே உள்ளது. அவருடைய இந்நிலை அவரின் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குணப்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.

ஆகையால் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேற்கொண்டுத் தகவல்களை மருத்துவர் குழுவுடன் ஆலோசித்து விட்டு தருகிறேன்.”

என்று அவ்வீடியோவில் கூறி இருந்தார்.

அந்த வீடியோ இதோ:

https://www.facebook.com/charan.sripathipanditharadhyula/videos/10157539975301370/

Conclusion

நம் விரிவான ஆய்வில்  எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ் என்று ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் அவர் இன்னும் சிகிச்சையில்தான் உள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Result: False


Our Sources

Nakkeeran: https://www.nakkheeran.in/cinema/cinema-news/spb-charan-about-sp-balasubramaniyam-health

Hindu Tamil: https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/571431-sp-chran-shares-that-spb-got-negative-for-corona.html

Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=611667

News7 Tamil Twitter Profile: https://twitter.com/news7tamil/status/1297770520935464960

SP Charan Facebook Profile: https://www.facebook.com/charan.sripathipanditharadhyula/videos/10157539975301370/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular