வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பயங்கரவாத மாநிலமாக மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவிப்பு?

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பயங்கரவாத மாநிலமாக மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவிப்பு?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

திமுக ஆட்சியில் அமர்ந்தால், ஐக்கிய நாடுகள் சபையால் பாகிஸ்தான் எவ்வாறு பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டதோ அதே போன்று தமிழகமும் மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு கருத்துக் கணிப்பு முடிவு வெளியிட்டுள்ளதாகப் பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளமான ஷேர் சாட்டில் பகிரப்பட்டு வருகின்றது.

திமுக
Source: Sharechat

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் பிரச்சாரக் களங்களும் சூடுபிடித்துள்ளன.

கூட்டணி, தொகுதிப்பங்கீடு, பரப்புரைகள், தேர்தல் வாக்குறுதிகள் என்று தமிழகம் அரசியல் மயமாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலமாக உலா வருகின்ற போலிச்செய்திகளுக்கும் பஞ்சமில்லை.

அவ்வகையில், திமுக ஆட்சியில் அமர்ந்தால் ஐநா சபை பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக குறிப்பிட்டது போன்று தமிழகமும் பயங்கரவாத மாநிலமாக மாறும் என்று பிரபல செய்தி நிறுவனமான பிபிசி செய்தி வெளியிட்டிருப்பது போன்ற பதிவொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

Source: Facebook

Archived Link: https://archive.vn/XGZZc

Archived Link 2: https://archive.vn/qjPC0

சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

திமுக குறித்த குறிப்பிட்ட அப்பதிவில் பிபிசியின் செய்தி வாசிப்பாளர் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2020 ஆம் ஆண்டே அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், அப்புகைப்படம் தற்போது மீண்டும் ஃபேஸ்புக், ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகிறது என்பதும் நமக்குத் தெரிய வந்தது.

திமுக
Source: Facebook

குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் பிப்ரவரி 22, 2020 ஆம் வருடம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிபிசி அக்குறிப்பிட்ட தேதியில் இதுபோன்ற செய்தி எதுவும் வெளியிட்டுள்ளதா என்பதைத் தேடிய பொழுது, பிபிசியில் நியூஸ் கார்டுகள் எல்லாவற்றிலும் தமிழ் என்பது தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

ஆனால், வைரலாகும் புகைப்படத்தில் லோகோ எழுத்துக்கள் எல்லாமே ஆங்கிலத்தில் உள்ளன. மேலும், அக்குறிப்பிட்ட தேதியில் இதுபோன்ற செய்தி எதுவும் வெளியாகவில்லை. தேசிய, சர்வதேச செய்திகளில் இதுபோன்று திமுக குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.

திமுக
Source: BBC

தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த செய்தி வாசிப்பாளரை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக இணையத்தில் தேடியபோது அவர் பெயர் ஆலியா நாஸ்கி என்பதும், அவர் பிபிசி நிறுவனத்தின் உருது மொழி செய்தி வாசிப்பாளர் என்பதும் தெரிய வந்தது.

Source: Youtube

மேலும், உலக அமைதிக்கான அமைப்பின் இணையப்பக்கங்களிலும் அக்குறிப்பிட்ட தேதியில் திமுக குறித்த எவ்வித செய்தியும், கருத்துக் கணிப்பும் வெளியாகவில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.

Conclusion

எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பயங்கரவாத மாநிலம் ஆகும் என்பதாக உலக அமைதிக்கான அமைப்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் தவறானது; சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

BBC: https://www.bbc.com/tamil

YouTube: https://www.youtube.com/watch?app=desktop&v=GK1k_8ukqLs

OWP: https://theowp.org/reports/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular