Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது.
ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஆளுநர் தமிழ்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலோ, இணையப்பக்கத்திலோ அவ்வாறு எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை.
எனவே, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த இவானியை இதுதொடர்பாக கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று பகிர்ந்திருந்திருந்ததையும் நமக்கு அளித்தார். இந்த செய்தி குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் கோவை சத்யன் மற்றும் சிடிஆர்.நிர்மல்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் “இது போலியான செய்தி” என்று உறுதி செய்தனர்.
எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் மற்றும் செய்தி போலியானது என்பது உறுதியாகியது.
Also Read: சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report From, Puthiyathalaimurai, Dated January 07, 2025
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated January 08, 2025
Phone Conversation With, Kovai Sathyan, AIADMK, CTR.Nirmalkumar, AIADMK, Dated January 08, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025
Ramkumar Kaliamurthy
April 2, 2025