சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி நிறுத்தினால், அண்ணாமலையை முதல்வராக்க அதிமுக கடுமையாக உழைக்கும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு - 1

Twitter Link | Archive Link

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு - 2

Twitter Link | Archive Link

Also Read: வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

நியூஸ் 7 தமிழ் மற்றும் கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. எனவே இந்த ஊடகங்கள் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என்பதை உறுதி செய்ய, முன்னதாக நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் நியூஸ் 7 தமிழ் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர், இந்த நியூஸ்கார்ட் பொய்யானது, இதனை நாங்கள் வெளியிடவில்லை” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து  கதிர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று கதிர் நியூஸ் வெளியிட்டிருந்த மறுப்பு பதிவை காண முடிந்தது.

Archive link

Also Read: தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று கூறினாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

Conclusion

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் முற்றிலும் போலியானவை என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வழியாக உறுதியாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/Fabricated

Source
Newschecker Conversation

Kathir News


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular