தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தையானது என்னவோ உண்மைதான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மறைந்த சின்னத்திரை நடிகையின் தற்கொலை வழக்கில் காவல்துறையினர் விசாரணையில் அவரது கணவரான ஹேம்நாத் கொடுத்த மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அரசியலில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் தனக்கு அவர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஹேம்நாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், குறிப்பிட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ள நிலையில், “நடிகை தற்கொலை எனக்குத் தொடர்பில்லை. தாத்தா ஆகவேண்டிய வயதில் நான் தந்தையானது என்னவோ உண்மைதான். அதற்காக எல்லா பெண் விவகாரங்களிலும் என்னைத் தொடர்பு படுத்துவது அறமல்ல” என்று கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டு தந்தி டிவியுடையதாக இருந்ததால் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அப்படி ஏதேனும் நியூஸ்கார்டு வெளியாகியுள்ளதா என்று பார்த்தோம்.
அப்போது, “நடிகை மரணம். விசாரணை நடத்தலாம். நடிகை மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய செய்தி குறித்து வெளியாகியுள்ள நியூஸ்கார்டினை எடுத்தே குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டினை போலியாக எடிட் செய்துள்ளனர் என்பது நமக்கு உறுதியானது.
மேலும், இதுகுறித்து தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு வினோத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.


தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து ஜெயக்குமார் கடந்த 2020 ஆம் ஆண்டே இவ்விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையில் அப்போதைய ஆளுங்கட்சி அமைச்சராக இருந்த ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார்.
தொடர்ந்து, தற்போது மீண்டும் இவ்விவகாரம் வெடிக்கும் நிலையில் ”சின்னத்திரை நடிகையான சித்ராவின் தற்கொலை வழக்கில் முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அவரது மரணத்தில் ஒருவேளை சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதற்கு மறுவிசாரணை நடத்தலாம். மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கும்.” என்பதாக அவர் சமீபத்தில் பேசியுள்ளார்.
இதனையே, தந்தி டிவி செய்தியாக வெளியிட்டிருக்கும் நிலையில் குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
Conclusion
தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media/Altered Photo/Video
Our Sources
Thanthi Tv
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)