Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பஞ்சாங்க முறையான கோச்சாரத்தில் உள்ளதுபோல் சந்திரனும், செவ்வாயும் அருகருகே உள்ள சந்திரயான் எடுத்த படம்
Fact: வைரலாகும் படம் மூன்று வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாகும். இப்படம் சந்திரயானால் எடுக்கப்பட்டதல்ல; Sergio Scauso என்பவரால் எடுக்கப்பட்டதாகும்.
சந்திரயான் 3 நேற்று வெற்றிக்கரமாக நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று (21/08/2023) அதிகாலையில் சந்திரயான் எடுத்த படம் என்று என்று கூறி புகைப்படம் என்று ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் சந்திரனும் செவ்வாயும் அருகருகே இருப்பதாகவும், அது இந்து பஞ்சாங்க முறையான கோச்சாரத்துடன் (ஜோதிட கிரக நிலைகள்) ஒத்துபோவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!
சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக கூறி தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக திங்கட்கிழமை கோச்சாரத்தில் சந்திரனும் செவ்வாயும் அருகருகே உள்ளதா என ஆராய்ந்தோம். அதில் சந்திரனும் செவ்வாயும் அருகருகேயே உள்ளது என epanchang.com வழியாக உறுதியானது.
இதனையடுத்து வைரலாகும் படம் குறித்த உண்மையறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம். அதில் நாசா இணையத்தளத்தில் ‘Mars at the Moon’s Edge’ எனும் தலைப்பிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 15/08/2020 அன்று இதே படம் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இப்படத்தை Sergio Scauso என்பவர் எடுத்ததாக அத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அடிப்படையாக வைத்து தேடியதில் Sergio Scauso எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் 10/08/2020 அன்று ‘Ocultamiento de Marte por la Luna’ (செவ்வாய் கிரகத்தை சந்திரன் மறைக்கின்றது) என்று குறிப்பிட்டு இப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
Sergio Scauso-வின் படத்தை திருப்பி (Rotate செய்து), ஓரங்கள் வெட்டப்பட்டு வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை திங்களன்று எடுக்கப்பட்ட படம் என்றும், Sergio Scauso என்பவரால் எடுக்கப்பட்டதை சந்திரயானால் எடுக்கப்பட்டது என்றும் பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
போதாதற்கு பஞ்சாங்கத்தில் சந்திரனும் செவ்வாயும் அருகருகே இருப்பதுபோல் சந்திரயான் எடுத்த படத்திலும் சந்திரனும் செவ்வாயும் அருகருகே உள்ளது என்று தேவையில்லாத கட்டுக்கதையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் உணர முடிகின்றது.
Also Read: ‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?
சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from science.nasa.gov, Dated August 15, 2020
Facebook Post from Sergio Scauso, Dated August 10, 2020
E Pachang.com
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)