சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Check‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?

‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் –  அண்ணாமலை சபதம்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். தந்தி தொலைக்காட்சியும், பாஜக தரப்பும் இதை தெளிவு செய்துள்ளது.

“என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்ய விடமாட்டேன் ” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சபதமிட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்டு
Screengrab from Twitter@SriRama53404184

Twitter Link | Archived Link

 என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்டு
Screengrab from Facebook/jayaraman.ramesh2

Facebook Link

 என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்டு
Screengrab from Facebook/ganeshan.ganesh.73

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

Fact Check/Verification

என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை சபதமிட்டதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது; அண்ணாமலை இவ்வாறு கருத்தை தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள பிப்ரவரி 04, 2022 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. தொடர்ந்து தேடியதில் இதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 03, 2022 அன்று அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அண்ணாமலை கூறிய கருத்தை நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று உறுதி செய்தார்.

Also Read: பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்தனரா?

Conclusion

என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை சபதமிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Vinothkumar, Thanthi TV

Phone Conversation with SG Suryah, State Secretary, BJP
Tweet from Thanthi TV, Dated Feb 03, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular