Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்த குழந்தை
Fact: பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.
“நீண்டநேரம் டையப்பர் அணிவித்த தாயின் அலட்சியத்தால் புற்றுநோய் தொற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பரிதாப பலி” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!
நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்த குழந்தை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்டினை ஆராய்ந்தபோது அதில் பல்வேறு எழுத்துப்பிழைகள் இருப்பதைக் காண முடிந்தது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு முதலே இந்த நியூஸ்கார்ட் வைரலாகி வருகிறது என்பதையும் நம் தேடலில் அறிய முடிந்தது.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக இந்த நியூஸ்கார்ட் பரவி வருகின்ற நிலையில், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் ஆசிரியரான சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் நான்கு வயது குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக நீண்ட நேரம் டையப்பர் மாற்றாமல் விட்டதால் காயம் மற்றும் தொற்று ஏற்பட்டு இறந்த சம்பவம் தவிர இதுவரை இந்தியாவில் அவ்வாறு நடைபெற்றதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது இதன்மூலமாக தெளிவாகிறது.
Also Read: சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்த குழந்தை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation With Sugitha Sarangaraj, News 7 Tamil, Dated September 19, 2023
X Post From, News 7 Tamil, Dated September 16, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 12, 2024
Vijayalakshmi Balasubramaniyan
July 18, 2024
Ramkumar Kaliamurthy
November 18, 2022