சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkதமிழர்களை சிறுபான்மையினர் என்று கூறினாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?

தமிழர்களை சிறுபான்மையினர் என்று கூறினாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழர்களை சிறுபான்மையினர் என்றும், பொங்கல் இந்தியப் பண்டிகை இல்லை என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“பொங்கல் இந்தியப் பண்டிகை இல்லை. ஹிந்தி பேசுபவர்களை ஒப்பிட்டால் தமிழர்கள் சிறுபான்மையினர். பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமே. இந்தியப் பண்டிகை இல்லை. சிறுபான்மை மக்களின் பண்டிகைக்காக இந்தியா முழுவதும் நடைபெறும் SBI வங்கித் தேர்வை வேறு தேதியில் வைக்க முடியாது” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from Twitter @MPrabakar7
Screenshot from Twitter @sarakkusankar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?

Fact check/Verification

தமிழர்களை சிறுபான்மையினர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதனை ஆராய்ந்தோம்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்வாறு ஏதேனும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதா என்று தேடினோம்.

பொங்கல் பண்டிகையன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “Greetings and good wishes on Makar Sankranti, Pongal, Uttarayan, Pausha Parbon and Magh Bihu. Let there be good harvest, joy and good health for all.” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் சாணக்யா செய்தி ஊடகத்தின் பெயரில் பரவிய நிலையில் அதன் நிறுவனர் &ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டேவை இதுகுறித்து தொடர்பு கொண்டோம்.

அதற்கு அவர், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற அந்த நியூஸ்கார்ட் மற்றும் செய்தி ”போலியானது; சாணக்யா வெளியிட்டது அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.

Also Read: நேபாள விமான விபத்து என்று பகிரப்படும் பழைய, தவறான புகைப்படங்கள்!

Conclusion

தமிழர்களை சிறுபான்மையினர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Twitter Post From, Nirmala Sitharaman, Dated January 15, 2023

Phone Conversation With, Rangaraj Pandey, Dated January 17, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular