வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckNewsதெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

தமிழ்நாட்டை தமிழகம் என்றால் தெலுங்கானாவை ’துலுக்கானா’ எனவும், புதுச்சேரியை ’பிரிச்சிமேயி’ எனவும் நான் அழைக்கலாமா என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சரமாரி கேள்வி என்பதாக இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot From Twitter @PeriyaKuttoosi

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நேபாள விமான விபத்து என்று பகிரப்படும் பழைய, தவறான புகைப்படங்கள்!

Fact check/Verification

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாட்டினை தமிழகம் என்று அழைத்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இருந்ததுடன், தந்தி டிவியின் எழுத்துருவில் இருந்து சற்று வேறுபட்டிருந்தது.

எனவே, தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு வினோத்திடம் இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது பரவும் நியூஸ்கார்ட் “போலியானது” என்று விளக்கமளித்தார்.

முன்னதாக தமிழிசை செளந்தரராஜன், “ஆளுநர் சொல்லியதில் உள்ள உட்பொருளை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பிரிவினைவாதக் கருத்துகள் அதிகமாக இப்பொழுது வருகிறது. இந்த நேரத்தில் அவர் அதைச் சொல்லியுள்ளார். அவர் சொல்லியது, ‘தமிழகத்தை தன் நாடு என அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தனிநாடு என எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

Also Read: துபாய் மசூதியில் இஸ்லாமிய பெண்கள் ராம பஜனை எனப்பரவும் புட்டபர்த்தி வீடியோ!

Conclusion

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாட்டினை தமிழகம் என்று அழைத்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Phone Conversation With Vinoth, From Thanthi TV, Dated January 16, 2023
Facebook Post, By Thanthi Tv, Dated January 06, 2023
Report, From Nakkheeran, Dated January 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular