Fact Check
அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்றாரா செல்லூர் ராஜூ?
Claim: அதிமுகவினர்கள் அனைவரும் பாதாம்,பிஸ்தா,முந்திரிகள் சாப்பிட்டு வலுவோடு உள்ளோம். திமுக வலு இல்லாததால் கூட்டணியை தேடி அலைகிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Fact: இத்தகவல் தவறானது என்று புதியதலைமுறை விளக்கமளித்துள்ளது.
அதிமுகவினர் அனைவரும் பாதாம் பிஸ்தா சாப்பிடு வலுவோடு உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“அதிமுகவினர்கள் அனைவரும் பாதாம்,பிஸ்தா,முந்திரிகள் சாப்பிட்டு வலுவோடு உள்ளோம். திமுக வலு இல்லாததால் கூட்டணியை தேடி அலைகிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
அதிமுகவினர் அனைவரும் பாதாம் பிஸ்தா சாப்பிடு வலுவோடு உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவியது. அதில் எழுத்துப்பிழைகளும் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அதில், “திமுக வலு இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காததில் ஏதோ மறைமுக தவறு இருக்கிறது. திமுக வலு இல்லாததால் கூட்டணியை தேடி அலைகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ” என்று நியூஸ்கார்ட் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே எடிட் செய்து வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியது.
மேலும், புதியதலைமுறை சார்பில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று வைரல் நியூஸ்கார்டு குறித்து விளக்கமளித்திருந்தனர்.

Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!
Conclusion
அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated March 14, 2024
Puthiyathalaimurai Website Post
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)