வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkமது விலையேற்றதை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தினாரா?

மது விலையேற்றதை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நடிகை காயத்ரி ரகுராம் மது விலையேற்றதை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக பரவும் புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் நடிகையும் தமிழக பாஜகவின் கலை மற்றும் பண்பாட்டு அணியின் தலைவருமான காயத்ரி ரகுராமின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

வைரலாகும் அப்புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் “தமிழக அரசே குவார்ட்டர் விலையை குறை” என்கிற வாசகம் பொருந்திய பதாகை ஒன்றை பிடித்துக் கொண்டுள்ளார்.

மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக வைரலாகும் புகைப்படம்

இந்தப் படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். 

மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக பரவும் பதிவு -1

Archive Link: https://archive.ph/sEmB5

மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக பரவும் பதிவு -2

Archive Link: https://archive.ph/qy2AH

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹெச்.ராஜா குறித்து வைரலாகும் விஷம புகைப்படம்!

Fact Check/Verification

காயத்ரி ரகுராம் மது விலையேற்றதை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலதைத் தொடர்ந்து அப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் இப்புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.

தமிழகத்தில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தைத் தொடர்ந்து தமிழக அரசு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக சார்பில் கடந்த ஞாயிறன்று (13/06/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களும், பாஜகவைச் சார்ந்தவர்களும் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காயத்ரி ரகுராம் அவர்களும் இதில் கலந்துக் கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். இதுக்குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

காயத்ரி ரகுராம் பகிர்ந்த இப்புகைப்படத்தை எடிட் செய்தே மேற்கண்ட பொய் செய்தி பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், மார்ஃபிங் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஒப்பீடு படம்

Also Read: மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?

Conclusion

காயத்ரி ரகுராம் மது விலையேற்றதை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Gayathri Jayaram’s Twitter Handle: https://twitter.com/BJP_Gayathri_R/status/1403953450598113282


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular