ஹெச்.ராஜா குறித்து விஷமத்தனமானப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி செய்திபொருளாக மாறுபவர் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா.
பரபரப்புக்காக ஏதாவது ஒரு கருத்தை கூறி, பின் அதற்காக மன்னிப்பு கேட்பதும் இவர் வாடிக்கையாக செய்து வருகின்றார். சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை குறித்து முரணான ஒரு கருத்தை கூறி, அதற்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் “நான் சாகலாம் என்று இருக்கிறேன்” என்கிற வாசகம் பொருந்திய பதாகை ஒன்றை பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/DmuIS

Archive Link: https://archive.ph/GNcPj

Archive Link: https://archive.ph/NGovh
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஹெச்.ராஜா குறித்து விஷமத்தனமான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலதைத் தொடர்ந்து அப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் இப்புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தைத் தொடர்ந்து தமிழக அரசு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு பொது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் டாஸ்மாக் திறக்கும் இந்த முடிவு பெரும் ஆபத்துக்கு வழிகோலும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக சார்பில் கடந்த ஞாயிறன்று (13/06/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களும், பாஜகவைச் சார்ந்தவர்களும் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஹெச்.ராஜா அவர்களும் இதில் கலந்துக் கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். இதுக்குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.
ஹெச்.ராஜா பகிர்ந்த இப்புகைப்படத்தை எடிட் செய்தே மேற்கண்ட பொய் செய்தி பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், மார்ஃபிங் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?
Conclusion
ஹெச்.ராஜா குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டப் படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
H.Raja’s Twitter Handle: https://twitter.com/HRajaBJP/status/1403988527629492225
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)