Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் – ஆளுநர்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”செம கவுண்ட்டர் பாயிண்ட்…அந்த துண்டுச் சீட்டை டச் பண்ணியது சிறப்பு… பாராட்டுக்கள் ஆளுநரே” என்று இந்த புகைப்படம் பரவுகிறது. “துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்தாய் வாழ்த்தை நன்றாக பாடுவேன் தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களுக்கானது திராவிடர்களுக்கானது இல்லை ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது – ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று அந்த நியூஸ்கார்டில் இடம்பெற்றுள்ளது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?
துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று ஆளுநர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அப்போது, அதில் ”ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும் ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது – ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று நியூஸ்கார்ட் இடம்பெற்றிருந்தது.
ஆளுநர் துண்டுச்சீட்டு என்று சொல்லியதாக குறிப்பிட்ட நியூஸ்கார்டில் எங்கும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர் அப்படி கூறியதாக அதனை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.


தொடர்ந்து, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
Also Read: சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!
துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று ஆளுநர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post from Puthiyathalaimurai, Dated October 18, 2024
Phone Conversation from Ivani, Puthiyathalaimurai Digital, Dated October 21, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 3, 2025
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025