Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பேரிடர் நிவாரண நிதி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசினார்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். தினமலர் தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வெள்ள சேதங்களை தற்காலிகமாக சரிசெய்ய ₹7033 கோடியும், நிரந்தரமாக சரி செய்ய ₹12659 கோடியும் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் “தமிழகம் கேட்கும் பேரிடர் நிவாரண நிதியை முழுதாக வழங்கிவிட்டால் மட்டும் தமிழ்நாட்டினர் பாஜகவிற்கா வாக்களிக்க போகிறார்கள்?” என்று ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
பேரிடர் நிவாரண நிதி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அமைச்சர் இவ்வாறு பேசியதாக ஊடகங்களில் ஏதும் செய்தி வந்துள்ளதா என தேடினோம்.
இத்தேடலில் அமைச்சர் இவ்வாறு பேசியதாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
தொடர்ந்து அவரது சமூக ஊடக பக்கங்களில் இவ்வாறு ஒரு கருத்தை பதிவிட்டுள்ளாரா என்று ஆராய்ந்தோம். அதிலும் இவ்வாறு கருத்தை அவர் தெரிவித்ததற்கான தரவுகள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஜிதேந்திர சிங்கை மின்னஞ்சல் வழியாக தொடர்புக் கொண்டு வைரலாகும் இத்தகவல் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அவர் பதிலளிக்கும்பட்சத்தில் அந்த பதில் இந்த கட்டுரையுடன் இணைக்கப்படும்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனம் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து தினமலரின் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தினமலர் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்
Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பேரிடர் நிவாரண நிதி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation with Dhandapani, Dinamalar
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024