ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ராமர் கோயில் கட்டுமான பணியாளர்கள் கூட மோடி ஜி உணவு அருந்திய போது எடுத்த புகைப்படம்.

Fact: வைரலாகும் புகைப்படம் எடுக்கப்பட்டது வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் வளாக திறப்பு விழாவின் போது ஆகும்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணியாளர்களுடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“ராமர் கோயில் கட்டுமான பணியாளர்கள் கூட மோடி ஜி உணவு அருந்திய போது” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

அயோத்தி
Screenshot from X @tirunelveli_bjp

Archived Link

Screenshot from Facebook/Medavakkam Malaselvakumar

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணியாளர்களுடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் வளாக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுடன் இணைந்து உணவருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்குத் தெரிய வந்தது.

டிசம்பர் 13, 2021 அன்று பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த புகைப்படம் மட்டுமின்றி காசி விஸ்வநாதர் வளாக கட்டுமானப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி இடம்பெற்றிருக்கும் பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரசார் பாரதி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் வாரணாசி காசி விஸ்வநாதர் வளாக திறப்பு விழாவில் பிரதமர் மோடி பணியாளர்களுடன் உணவருந்திய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பதிவில் இருக்கும் புகைப்படமே அயோத்தி ராமர் கோயில் பணியாளர்களுடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவுகிறது.

Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணியாளர்களுடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல்  தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post From, Narendra Modi, Dated December 13, 2021
Facebook Post From, Prasar Bharati News Services, Dated December 13, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular