Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்றார் கனிமொழி.
Fact: இத்தகவல் தவறானதாகும். கனிமொழி எவ்விடத்திலும் இவ்வாறு பேசவில்லை.
“இத்தனை கோடி பேர்கள் பைத்தியமாக வணங்கும் ஒரு பொம்மையை காணவே இங்கு வந்தேன். என்னுடன் வந்தவர்கள் பயபக்தியுடன் அந்த பொம்மையை வணங்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்று திருப்பதி வெங்கடாசலபதி குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?
திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்று கனிமொழி கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, கனிமொழி இவ்வாறு பேசினாரா என்பதை உறுதி செய்ய உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இணையத்தில் இதுக்குறித்து தேடினோம்.
அதில் ‘திருப்பதி சர்ச்சைப் பேச்சு; திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதிவு: கரீம் நகர் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு’ என்று தலைப்பிட்டு இந்து தமிழ் ஜனவரி 19, 2018 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தியில் திருச்சியில் திக சார்பில் நடந்த உலக நாத்திக மாநாட்டில் கனிமொழி கலந்துக்கொண்டு திருப்பதி கோயிலின் சிறப்பு தரிசனம் குறித்தும், உண்டியலுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் விமர்சித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கனிமொழி மீது 153a, 504, 505, 298, 295 A ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இச்செய்தியில் எவ்விடத்திலும் வைரலாகும் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல் திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்று கனிமொழி விமர்சித்ததாக குறிப்பிட்டிருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மேலும் தேடுகையில் திக மாநாட்டில் கனிமொழி ஆற்றிய உரை நியூஸ்கிளிட்ஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த உரையை முழுமையாக கேட்கையில் எந்த ஒரு இடத்த்திலும் திருப்பதி சிலையை பொம்மை என்று கனிமொழி கூறியிருக்கவிலை. திருப்பதி சிறப்பு தரிசனம் குறித்தும், உண்டியல் பாதுகாப்பு குறித்தும் மட்டுமே பேசி இருந்தார்.
நியூஸ்மினிட், இந்தியா டுடே உள்ளிட்ட ஆங்கில ஊடக யூடியூப் சேனல்களிலும் இவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அவற்றிலும் மேற்கண்ட தகவல்களே இடம்பெற்றிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் திருப்பதி வெங்கடாசலபதி குறித்து கனிமொழி பேசியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.
Also Read: கோவையில் டம்மி வேட்பாளரை நிறுத்த அண்ணாமலையும் உதயநிதியும் சந்தித்தனரா?
திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்று கனிமொழி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை தெளிவாகியுள்ளது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Hindu Tamil, Dated January 18, 2018
Youtube Video from NewsGlitz Tamil, January 13, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025