Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கேரள கோவில்களில் இனி உண்டியலில் பணம் இட மாட்டோம்…ஆண்டவனுக்கு கோரிக்கைச் சீட்டுதான் இடுவோம் என்று மக்கள் முடிவெடுத்து தொடங்கி விட்டனர் என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் எடுக்கப்படும் பல்வேறு புதிய முடிவுகள் சிலருக்கு சாதகமாக இல்லை. இதனால் தமிழ்நாடு கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு செய்திகள் வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், “இனி கோவில் உண்டியல்களில் பணம் இட மாட்டோம்! ஆண்டவனுக்குக் கோரிக்கைச் சீட்டுதான் இடுவோம். கேரளாவில் தொடங்கி விட்டார்கள். நாம் எப்போது?” என்கிற வாசகங்களுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கேரள கோவில்களில் இனி உண்டியலில் பணம் இட மாட்டோம், கோரிக்கைச் சீட்டுதான் இடுவோம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கேரளாவில் கோவில்களில் இதுபோன்று உண்டியல்களில் பணம் போடுவதை நிறுத்தி விட்டார்கள் மக்கள் என்பதாக செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று முதலில் தேடினோம். சமீபத்தில் அதுபோன்ற செய்திகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து குறிப்பிட்ட வைரல் பதிவில் உள்ள புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன் முடிவில், கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதன்படி, கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் நுழையலாம் என்கிற அறிவிப்பினைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த மதம் சார்ந்த போராட்டக்காரர்கள் இணைந்து “Save sabarimala” என்கிற குழுப்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், கேரளாவில் பல்வேறு இடங்களிலும் கோவில்களில் உள்ள உண்டியல்களில் “நீதி தரணும் பொன்னு ஸ்வாமியே” என்கிற மலையாள வாசகங்கள் அடங்கிய காகிதங்களை பணத்திற்கு பதிலாக இந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த மக்கள் செலுத்தினர்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்கும் இனி காணிக்கை செலுத்தாமல் காகித கோரிக்கைகளே செலுத்தப்படும் என்பதாக அறிவித்திருந்தனர்.
எனினும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாக இந்த குறிப்பிட்ட போராட்டம் தவிர மற்றபடி கோவில்களுக்கு காணிக்கைகள் செலுத்தப்பட்டுத்தான் வருகின்றன என்பதும், தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற எவ்வித காகித காணிக்கைகளும் மக்களால் செலுத்தப்படவில்லை என்பதும் உறுதியானது.
மேலும், 2018ம் ஆண்டு இந்த செய்தியை முன்வைத்து “My nation” என்கிற இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எடுத்து தற்போது நடைபெற்று வருவது போன்று வைரல் பதிவில் உபயோகித்துள்ளதும் நமக்கு உறுதியானது.
கேரள கோவில்களில் இனி உண்டியலில் பணம் இட மாட்டோம், கோரிக்கைச் சீட்டுதான் இடுவோம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகப் பரவும் தகவல் தவறாக மக்களை திசை திருப்பும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 17, 2024
Ramkumar Kaliamurthy
September 23, 2024