செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkதமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றதா?

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் நியூஸ்கார்டானது 2019 ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும்.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெறவிருப்பதாக கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

Facebook Link | Archive Link

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

Facebook Link

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் 2021ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருப்பதற்கான அறிவிக்கைகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அந்த அறிவிக்கைகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

இதுத்தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதாக எந்த அறிவிக்கையும் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆகவே இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டு 2019 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டு என தெரிய வந்தது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. இதுக்குறித்த செய்தியானது நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில் வெளியிடப்பட்ட நியூஸ்கார்டை வைத்தே இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

 Also Read: வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

Conclusion

தமிழகம் முழுவதும் டிசம்பர் 27 மற்றும் 30ல் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைப்பெறவிருப்பதாக பரவும் தகவல் தவறானது. வைரலாகும் நியூஸ்கார்டானது 2019 ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from News 18 Tamil Nadu, Dated December 02, 2019
Tamil Nadu State Election Commission


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular