Fact Check
எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தாரா?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தார் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நாடு முழுவதும் கொரானாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. அதிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் பல நாடுகளிலிருந்தும், பல பிரபலங்களிடமிருந்தும் உதவிகள் இதியாவிற்கு கிடைத்து வருகின்றது. இவ்வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி அவர்கள், இவ்வருடத்துக்குக்கான தனது ஐபிஎல் வருமானமான 15 கோடி ரூபாயை ஆக்ஸிஜன் வாங்குவதற்காக அளித்ததாக கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/xCp4H

Archive Link: https://archive.ph/AKo6M

Archive Link: https://archive.ph/4ynyU
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தார் என்று வைரலாகும் நியூஸ்கார்டை காணும்போதே, அது பொய்யானதுதான் என்பது உறுதியாக தெரிந்தது. ஏனெனில் அந்த நியூஸ்கார்டில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை. எம்.எஸ்.தோனி, ஐபிஎல், ஆக்ஸிஜன் ஆகிய வார்த்தைகள் முறையே எம்.ஸ்.தோனி, ஐபில், ஆக்ஸிஜென் என எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதை முறைப்படி ஆய்வு செய்து, இதுக்குறித்து விளக்க முடிவு செய்தோம்.
ஆய்வின் முதற்படியாக இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்துள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். ஆனால் அதில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பிரிவினரைத் தொடர்புக் கொண்டு இச்செய்தி குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர்கள்,
“இதுத் தவறான செய்தி. இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”
என்று பதிலளித்தனர்.
இதன்பின் எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்ததாக வேறு ஏதேனும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளதா என்பதை தேடினோம். இதில் தோனி சென்ற வருடம் புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதுக்குறித்த செய்தியை இங்கே படிக்கலாம்.
ஆனால் எம்.எஸ்.தோனி 15 கோடி கொடுத்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
மேற்கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தார் என்று பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது.
Conclusion
எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)