வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkமாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் பல தடைகளுக்கு பின் நேற்று 25/11/2015 திரையரங்குக்கு வந்தது. டைம் லூப் (Time loop) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படமானது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில், “தற்கொலை எங்கள் மார்க்கத்திற்கு எதிரானது. மாநாடு திரைப்படத்தில் இஸ்லாமிய இளைஞர் மீண்டும் மீண்டும் தற்கொலை செய்வதுபோல் காட்சி அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.” என்று பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் -1

Twitter Link | Archive Link

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, சையது இப்ராஹிம் அவர்களைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து கேட்டோம்.

அதற்கு அவர்,

“மாநாடு திரைப்படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. இது முற்றிலும் பொய்யான செய்தி”

 என்று பதிலளித்தார்.

இதனையடுத்து இத்தகவலானது கதிர் நியூஸ் எனும் ஆன்லைன் ஊடகத்தின் நியூஸ்கார்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அதன் சமூக பக்கங்களில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்ட் வெளிவந்துள்ளதா என்பதை தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை கதிர் நியூஸ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து கதிர் நியூஸின் நிர்வாகிகளில் ஒருவரான பிரதீப் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்,

“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”

என்று விளக்கமளித்தார்.

இதனையடுத்து கதிர் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று பதிவிடப்பட்டதை நம்மால் காண முடிந்தது.

Archive Link

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று  வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

Also Read: இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?

Conclusion

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Vellore Syed Ibrahim, National Secretary BJP (Minority Morcha)

Pradeep, Kathir News


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular