Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?

banner_image

மாரிதாஸ், யூடியூப் வலைத்தளப் பக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்து வரும் இவரது கைது விவகாரத்தைக் கண்டித்து இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மாரிதாஸ்
Source: Facebook

யூடியூப் பதிவரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ் என்பவரை மறைந்த முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ட்வீட் வெளியிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்து பெரும் சர்ச்சை மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாரிதாஸ் மீதான வழக்கு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது போலி மின்னஞ்சல் வழக்கில் சிறையில் இருக்கிறார்.

இதற்கிடையில், “மாரிதாஸ் கைது. அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம். யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். மாரிதாசை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மாரிதாஸ்
Source: Facebook

Facebook Link

மாரிதாஸ்
Source: Facebook

Facebook Link

மாரிதாஸ்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் தவறான வீடியோக்கள்!

Fact check/ Verification

மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதியதலைமுறை நியூஸ் கார்டு போன்று இருந்ததால், புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் ராசூஸ் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை நமக்கு உறுதி செய்தார்.

தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளது நமக்குத் தெரிய வந்தது.

Source: Twitter

எனவே, குறிப்பிட்ட செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்பது நமக்கு உறுதியானது.

Conclusion:

மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

IMK

BBC

Puthiyathalaimurai Digital

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.