Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மாரிதாஸ், யூடியூப் வலைத்தளப் பக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்து வரும் இவரது கைது விவகாரத்தைக் கண்டித்து இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
யூடியூப் பதிவரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ் என்பவரை மறைந்த முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ட்வீட் வெளியிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்து பெரும் சர்ச்சை மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாரிதாஸ் மீதான வழக்கு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது போலி மின்னஞ்சல் வழக்கில் சிறையில் இருக்கிறார்.
இதற்கிடையில், “மாரிதாஸ் கைது. அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம். யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். மாரிதாசை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதியதலைமுறை நியூஸ் கார்டு போன்று இருந்ததால், புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் ராசூஸ் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளது நமக்குத் தெரிய வந்தது.
எனவே, குறிப்பிட்ட செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்பது நமக்கு உறுதியானது.
மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Puthiyathalaimurai Digital
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 18, 2024
Ramkumar Kaliamurthy
September 23, 2023
Vijayalakshmi Balasubramaniyan
November 9, 2023