Claim: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்
Fact: இத்தகவல் தவறானதாகும். மத்திய நிதியமைச்சகம் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கவில்லை.
ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம். இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும்” என்று இந்த செய்தி பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட உள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2017ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவது நமக்குத் தெரிய வந்தது. மேலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியைத் தொடர்ந்தே மீண்டும் இந்த செய்தி பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு வைரலாகிய இந்த செய்தி குறித்து அப்போதே ஆர்பிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், “It has been reported in certain sections of the media that commercial banks would have a 5 day week in terms of RBI instructions. It is clarified that this information is not factually correct. RBI has not issued any such directions.” என்று விளக்கமளிக்கத்திருந்தது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலையளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதா என்பது தொடர்பாக 05 டிசம்பர் 2023 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பகவத் காரத், IBA தரப்பிலிருந்து வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆனால், இந்த கோரிக்கை எப்போது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றோ, அதற்கான முன்முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவோ மத்திய நிதியமைச்சகம் சார்பில் எந்தவித அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த செய்தியை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
Also Read: சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றப்படுவதாகப் பரவும் வதந்தி வீடியோ!
Conclusion
ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட உள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Sansad.in
bankworkersunity.com
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)