Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி இவர்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இச்சம்பவமானது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அப்பதாகையில், “நான் திருடி சம்பாதித்து சொத்து சேர்த்த வழக்கை விரைவில் விசாரித்து என்னை கைது செய்ய வேண்டும்” என்கிற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய வைரலாகும் அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் அப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்று அதிமுக சார்பில் கடந்த புதனன்று (28/07/2021) தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கரூர் பகுதியில் இந்தப் போராட்டமானது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக தொண்டர்கள் கையில் பதாகையை ஏந்தி ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதுக்குறித்த செய்தி சமயம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. கூடவே விஜயபாஸ்கர் அவர்கள் கையில் பதாகையுடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அப்பதாகையில், “ நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த திமுக அரசை கண்டிக்கிறோம்.” என்று எழுதப்பட்டிருந்தது.
மேற்கண்ட செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமே எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் இப்போராட்டம் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
MR Vijaya Basakar Twitter Handle: https://twitter.com/OfficeofminMRV/status/1420303020357677057
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025