Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ 2020 ஆண்டின் பழைய வீடியோவாகும்.
நடந்து முடிந்த 2014 பொதுத்தேர்தலில் மகாலட்சுமி திட்டம் எனும் திட்டத்தை காங்கிரஸ் அதன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இத்திட்டத்தின்படி வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெண்களில் மூத்தவருக்கு வருடத்திற்கு ஒரு இலட்சம் (மாதத்திற்கு ₹8500) அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது.
தேர்தல் முடிவுகள் வந்து பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில் காங்கிரஸ் அறிவித்த ₹8500-யை பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் காத்திருந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கங்கனாவை அறைந்த CISF காவலர் ராகுல் காந்தியுடன் நிற்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் ‘Line of Muslim Women in Front of Bank in Muzaffarnagar, UP’ என்று குறிப்பிட்டு யூடியூப் பக்கம் ஒன்றில் இதே வீடியோ ஏப்ரல் 18, 2020 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இவ்வீடியோ குறித்து இணையத்தில் தேடுகையில் நியூஸ் 18 இந்தியாவில் வைரலாகும் வீடியோ குறித்த செய்தியை ஏப்ரல் 18, 2020 அன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தியில் ஜன் தன் வங்கி கணக்குகளில் ஒன்றிய அரசு செலுத்திய 500 ரூபாயை எடுக்காவிடில் அது திரும்ப அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என்று வதந்தி ஒன்று பரவியதை தொடர்ந்து பெண்கள் வரிசையாக வங்கி வாசலில் உட்கார்ந்திருந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?
காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ 2020 ஆண்டின் பழைய வீடியோவாகும். ஜன் தன் கணக்குகளில் செலுத்தப்பட்ட 500 ரூபாயை எடுக்காவிடில் அது திரும்ப அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என்று வதந்தி பரவியதை தொடர்ந்து அப்பெண்கள் வங்கி வாசலில் உட்கார்ந்திருந்துள்ளனர்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube video, News18 India report, April 20, 2020
Youtube video, April 18, 2020
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 28, 2024
Ramkumar Kaliamurthy
June 8, 2024
Ramkumar Kaliamurthy
June 6, 2024