Saturday, December 20, 2025

Fact Check

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என்று கேட்டனரா தூத்துக்குடி மக்கள்?

banner_image

Claim: தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு.

Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்து தூத்துக்குடி மக்கள் நிவாரண நிதி கேட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு.” என்று இந்த நியூஸ்கார்ட்  வைரலாகிறது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா
Screenshot from Facebook/Kalaikodan Salai

Facebook Link

Screenshot from X @Anti_CAA_23

Archived Link

Screenshot from Facebook/tp.jayaraman.5

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்து தூத்துக்குடி மக்கள் நிவாரண நிதி எங்கே என்று கேட்டதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.

அப்போது, “தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் உள்ளனர்” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் நியூஸ்கார்டை உருவாக்கியுள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது. எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

Fake News Card
Original News Card

அப்போது அவர், “நிர்மலா சீதாராமனை தூத்துக்குடி மக்கள் முற்றுகையிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார். எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு பரவுவது நமக்கு உறுதியாகியது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்து தூத்துக்குடி மக்கள் நிவாரண நிதி எங்கே என்று கேட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Phone Conversation with Ivani, Puthiyathalaimurai, Dated December 27, 2023
X Post From Puthiyathalaimurai, Dated December 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage