திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுப்பு

Fact: இத்தகவல் தவறானதாகும். “கடவுளை அறியாதவன் முட்டாள், ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சித்த போராட்டக்காரர்களையே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

“மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். கோயில் தெருக்களைச் சுற்றி, எங்கேயும், “ஓம் நமசிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம், மனசிற்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டுமாம். அக்கோயிலின், EO இப்படிச் சொல்லி மிரட்டி, கோயிலுக்குள்ளேயே, போலீஸை வரவழைத்து விட்டான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Twitter Link | Archived Link

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Archived Link

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவில், “நீங்கள் போஸ்டரை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தீர்கள் சார்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுவதை கேட்க முடிந்தது. அதற்கு கூட்டத்தில் ஒருவர், அதில் தப்பான வாசகம் ஏதும் இருக்கா? “கடவுளை நம்பாதவர்கள் முட்டாள்” என்று சொல்றோம் என்று கூறுவதையும் கேட்க முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடுகையில் சென்னை கபாலீஸ்வரை கோயில் அருகே யாதவ மகா சபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தினர் நூதன போராட்டம் ஒன்றை நடத்தியதாக நவம்பர் 20, 2023 அன்று நியூஸ் தமிழ் 24X7 செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் யாதவ மகா சபையின் தலைவரான தேவநாதன் யாதவ் அலுவலகத்தில், “கடவுளை அறியாதவன் முட்டாள், ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி” என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்ததாகவும்,  அந்த போர்டானது மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டதாகவும், இந்த செயலை கண்டித்து கபாலீஸ்வரர் கோயில் அருகே போராட்டம் நடைப்பெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

இச்செய்தியில் காணப்பட்ட வீடியோவில் இருந்த நபர், வைரலாகும் வீடியோவிலும் இருப்பதை காண முடிந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ இந்த நிகழ்வுடன் தொடர்புடையது என்பது உறுதியாகின்றது. இந்த நிகழ்வு தொடர்பாக வேறு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்

தொடர்ந்து தேடுகையில் தேவநாதன் யாதவும் இப்போராட்டம் குறித்தும், இப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். கடவுளை அறியாதவன் முட்டாள், ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சித்த போராட்டக்காரர்களையே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Tamil News 24X7, Dated November 20, 2023

Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular