Sunday, March 16, 2025
தமிழ்

Fact Check

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!

banner_image

Claim: ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை

Fact: இது பொய்யானத் தகவல் என்று கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.

“04442890021 என்கிற எண்ணிற்கு போன் செய்தால் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார். அதை நீங்கள் சொன்னதும் உங்களுடைய நட்சத்திரத்தை கேட்பார். அதை சொன்னபின் மந்திரங்களைச் சொல்லி ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்வதாக தேவஸ்தானம் உங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/lalitharaman.raman.5

Facebook Link | Archived Link

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/agasthiaraj.raj.9

Archived Link

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/lakshmikumar.bsc

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Fact Check/Verification

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக இத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள 04442890021 என்கிற எண்ணை தொடர்புக் கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அதில் இந்த எண் தற்சமயம் பயன்பாட்டில் இல்லை என அறிய முடிந்தது. இதனையடுத்து வைரலாகும் தகவல் குறித்து தேடுகையில், இத்தகவலானது கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை அறிய முடிந்தது.

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல்

தொடர்ந்து இத்தகவல் குறித்து தேடுகையில் இத்தகவல் பொய்யானது என்றும், இத்தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பழனி கோயில் நிர்வாகம் சார்பாகவ காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் தந்தி தொலைக்காட்சியில் கடந்த சனியன்று (ஆகஸ்ட் 5) செய்தி வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

தினமலர் மற்றும் இந்து தமிழிலும் இதுக்குறித்த செய்தி வெளிவந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என உறுதியாகின்றது.

Also Read: இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?

Conclusion

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from the user, செந்தில் குமார், Dated August 14, 2015

Report from Thanthi Tv, Dated August 05, 2023
Report from Hindu Tamil, Dated August 05, 2023
Report from Dinamalar, Dated August 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.