Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியர்களாவர். கர்பலாவில் நடந்த துக்க விழாவில் கலந்துக்கொள்ள அவர்கள் சென்றார்கள்.
இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் falak_haq120 எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆகஸ்ட் 31, 2023 அன்று ‘Arabeen walk 2023’ என்று குறிப்பிட்டு வைரலாகும் இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. (ஆனால் இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே இருக்கும் தற்போதைய பதட்டநிலையானது அக்டோபர் 07 ஆம் தேதியே தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது).

இதனையடுத்து இவ்வீடியோவை பகிர்ந்த ஃபலாக் ஹக்கின் கணவர் அலி ஹக்கை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர், “வைரலாகும் இவ்வீடியோவை நான்தான் எடுத்தேன். ஈராக்கின் கர்பலா நகரை நோக்கி நடந்தபோது இவ்வீடியோ எடுக்கப்பட்டது. இவ்வீடியோவில் நடுவில் இருப்பவர் என் மனைவி ஃபலாக் ஹக் ஆவார்” என்று தெரிவித்தார்.
கூடவே இப்படத்தின் மெடா டேட்டாவையும் நம்முடன் பகிர்ந்தார். அதில் இந்த வீடியோவானது ஆகஸ்ட் 29 தேதி மாலை 5 மணிக்கு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. (மெடா டேட்டா (Meta Data) ஒரு டிஜிட்டல் படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்கும் தகவலாகும்).

இதனடிப்படையில் பார்க்கையில் இவ்வீடியோவானது ஈராக்கின் கர்பலா பகுதியில் நடந்த அர்பானியா எனும் துக்க நிகழ்விற்கு தொடர்புடையது என அறிய முடிகின்றது.
இந்த நிகழ்வானது ஷியா முஸ்லீம்களால் அனுசரிக்கப்படுகின்றது. ஹூசைன் இபின் அலி எனும் இஸ்லாமியத் தலைவருக்காக 40 நாட்கள் இந்த துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவதெனில்,
Also Read: காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தவறான படம்!
இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram post from falak_haq120, Dated 31st August, 2023
Phone Conversation with Ali Haq, husband of Instagram account owner Falak Haq
Meta Data of Viral Video
Report from NDTV, September 08, 2023
இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 22, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 19, 2023
Ramkumar Kaliamurthy
October 18, 2023