Sunday, December 7, 2025

Fact Check

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

banner_image

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட்

“நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இந்திய ரூபாயை கொண்டுதான் வாங்குகிறீர்கள், பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link


Also Read:
 ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று புதிய தலைமுறை தரப்பில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பு பதிவை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில்தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரும்  இத்தகவல் தவறானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தேடுகையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமான பிஐபி ஃபேக்ட்செக்கில்(PIB Factcheck) வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தெளிவுப்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

Also Read: ‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டினரா?

Conclusion

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False / Fabricated Content

Source

Twitter thread from PIB Factcheck, Dated on 15th May 2022
Twitter thread from Puthiya Thalaimurai, Dated on 21st May 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage