சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?

ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வைரலாகும் படம்

உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள இஸ்லாமிய  வழிபாட்டுத் தலமான ஞானவாபி மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகிய நிலையில், முகலாயர் ஆட்சி காலத்தில் கிணற்றில் மறைக்கப்பட்ட 12 அடி சிவலிங்கம் 300 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளது என்று கூறி சிவலிங்கம் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Archive Link

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வைரலாகும் படம் - 1

Facebook Link

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வைரலாகும் படம் - 2

Facebook Link

Also Read: மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்றாரா அண்ணாமலை?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இவ்வாறு செய்ததில் வைரலாகும் புகைப்படத்தில் காணப்படும் லிங்கம் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் இல்லை, அது ஒடிசாவில் இருக்கும் பாபா புஸந்தேஷ்வர் கோயிலில் காணப்படும் சிவலிங்கம் என்பதை அறிய முடிந்தது.

பாபா புஸந்தேஷ்வர் கோயில்
Screesnshot of Odikala’s article

பாபா புஸந்தேஷ்வர் கோயில்  ஒடிசா மாநிலத்தின் பலசோரே மாவத்தில் கும்பிர்காடி எனும் கிராமத்தில் காணப்படும் சிவன் கோயிலாகும். இந்த கோயிலில் 12 அடி உயரமும் 12 அடி அகலமும் உடைய சிவலிங்கம் ஒன்று காணப்படுகின்றது. இந்த சிவலிங்கத்தின் புகைப்படத்தையே ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

பாபா புஸந்தேஷ்வர் கோயில் குறித்து இணைத்தில் வந்த கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் காணப்படும் சிவலிங்கம் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பாபா புஸந்தேஷ்வர் கோயிலில் காணப்படும் சிவலிங்கம் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/False Context

Source

Article from Odikala.com, Published on July 06, 2017
Article from Delhiplanet.com, Published on Feb 20, 2020
Article from Odishatour.in
Article from ebnw.net, Published on March 10, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular