Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்த போப்பாண்டவர்
Fact: வைரலாகும் புகைப்படத்தில் சிறுவன் ஒருவன் அப்பம் வாங்கும் காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளது.
போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ரோமாபுரியில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார். நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா? தேவன் நாய்க்காகவா (மிருகங்களுக்காகவா) மரித்து இரத்தம் சிந்தினார். வேத அறிவு இல்லாத இவர் பின்னால் கோடிக்கணக்கான ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தோ பரிதாபம். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். 1 பேதுரு 4;11” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
போப்பாண்டவராக இருந்த ஜான்பால் கடந்த 2005ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். தற்போது, போப்பிரான்சிஸ் என்பவர் பதவியில் உள்ள நிலையில் முன்னாள் போப்பாண்டவர் ஜான்பால் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்ததாகப் பரவும் புகைப்படம் குறித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் தேடினோம்.
அதன்முடிவில், தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் சிறுவன் ஒருவருக்கு அப்பம் வழங்கும் புகைப்படத்தை எடுத்து அதில் நாய் புகைப்படத்தை இணைத்துள்ளது நமக்குத் தெரிய வந்தது. “Pope Francis: people come from all over Bulgaria for their first communion” என்று lalucedimaria, வாடிகன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் போப் பிரான்சிஸ் சிறுவனுக்கு அப்பம் வழங்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தே போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.
Also Read: ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?
போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
religion.orf.at
vaticannews
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)