புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தோனேஷியாவில் நேற்று (14/12/2021) காலை 7.5 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?
Fact check/ Verification
புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவலின் பின்னணி குறித்து ஆய்வு செய்தோம். இதில் இத்தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பது தெரிய வந்தது.
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் 04-பட்டாலியன் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு அரசு துறைகள் இணைந்து நேற்று (டிசம்பர் 14) சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு ஒன்றை நடத்தினர். இந்நிழ்வானது புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரெஞ்சு போர் நினைவகம் எதிரே நடைப்பெற்றது.
இந்த ஒத்திகையானது ஒரு உண்மை நிகழ்வு போல் நடைப்பெற்றது. புதுச்சேரியில் சுனாமி அச்சுறுத்தல் இருப்பது போலவும், அதனால் கடலோரம் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது போலவும் ஒரு செயற்காட்சி இந்த ஒத்திகையில் உருவாக்கப்பட்டது. இந்த ஒத்திகையை உண்மை என்று நம்பியே ஊடகங்களில் இவ்வாறு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகை குறித்து புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் இந்த ஒத்திகையானது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் தலைமையில் நடைப்பெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒத்திகையில் பொதுப்பணித்துறை, மின்துறை, சுகாதாரத் துறை தீயணைப்புத் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, சமூகநலத் துறை உட்பட பல துறைகளைச் சேர்ந்த 200க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் ஒவ்வொரு துறையின் சிறந்த செயல்பாடுகள் குறித்தும் , அவர்கள் செய்யத் தவறிய செயல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி
Conclusion
புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவல் முற்றிலும் தவறான ஒன்றாகும்.
இதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puducherry Revenue and Disaster Management Press Release
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)