Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“இங்கிலாந்து ராணி எலிசபெத் முன் அவரை கணவரைத் (காமராஜர் அருகில் அமர்ந்து இருப்பவர்) தவிர, யாருமே அமர முடியாது. இங்கிலாந்து ராணி பரிமாற அதை அவர் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட பெருமை கொண்ட ஒரே மாமனிதர் கர்மவீரர் காமராஜர்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ்…’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்?
எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் ‘தி இந்து’ வெளியிட்ட செய்தி ஒன்றில் வைரலாகும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. 1961 ஆம் ஆண்டு ராணி எலிசபெத் தமிழகம் வந்தபோது, இளவரசர் ஆண்ட்ரூஸின் முதல் பிறந்தநாளை சென்னையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இவ்விழாவில் அச்சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த காமராஜர், நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். இவ்விழாவில் வெட்டப்பட்ட கேக் காமராஜரால் தருவிக்கப்பட்டுள்ளது.
இந்து வெளியிட்ட செய்தியில் காணப்படும் புகைப்படத்தில், ராணியின் கணவர் ஃபிலிப், காமராஜரைத் தவிர்த்து, அமைச்சர் சி.சுப்ரமணியம் மற்றும் வேறு சிலரும் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தை வைத்தே இங்கிலாந்து ராணி முன் அவர் கணவரைத் தவிர மற்றவர் அமர்ந்து உணவருந்த முடியாது, ஆனால் காமராசர் நேர்மையானவர் என்பதால் அவர் அமர அனுமதிக்கப்பட்டார் என்கிற தகவல் பரப்பப்படுகின்றது.
இதனையடுத்து மேலும் தேடியதில் ராணி எலிசபெத் உலகெங்கும் உள்ள பல முக்கியத் தலைவர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படங்களையும் நம்மால் காண முடிந்தது.


Also Read: கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?
எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர் என்று வைரலாகும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
The Hindu’s Article Published on September 10, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025
Ramkumar Kaliamurthy
July 18, 2025