Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சிறுவனான சீமானை பார்த்துதான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்ததாக நாதக சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் கூறினார்.
வைரலாகும் தகவல் தவறானதாகும். விகடன் தரப்பும் நாதக தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
“சிவகங்கைக்கு காமராஜர் காரில் போய்க் கொண்டிருந்தபோது, டவுசரோடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனை பார்த்துதான் மதிய உணவுத் திட்டமே ஆரம்பித்தார். அந்தப் பையன் வேறு யாருமல்ல, அண்ணன் சீமான்தான். ‘காமராஜர்’ படத்திலேயே இந்த காட்சி வந்திருக்கிறது” என்று நாதக சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: திமுக ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
சிறுவனான சீமானை பார்த்துதான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்ததாக நாதக நிர்வாகி வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ஜூனியர் விகடன் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக “எங்களுக்கு சாதி சாயம் பூசுவது, பனைசார் மற்றும் மேய்ச்சல் மற்றும் வேளாண் மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும். சரி, ஐ.நா சபை எதிர்வரும் 2026-ம் ஆண்டை உலக மேய்ச்சல் நிலங்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மலைப்பகுதிகளின் ஆண்டாக அறிவித்துள்ளது (International Year of Rangelands and Pastoralists 2026). இப்போது ஐ.நா-வுக்கும் சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என வெண்ணிலா கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டையும் வைரலாகும் நியூஸ்கார்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் மேற்காணப்பட்ட நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனைத் தொடர்ந்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என உறுதி செய்தார்.
இதை தொடர்ந்து விகடனின் சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து நாதக நிர்வாகி வெண்ணிலா தாயுமானவனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் “வைரலாகும் தகவல் பொய்யானது; நான் அவ்வாறு கூறவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
கூடவே மேலே நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஜூனியர் விகடனின் நியூஸ்கார்டை நமக்கு அனுப்பி வைத்து, அதுவே உண்மையான நியூஸ்கார்டு என்றும் தெரிவித்தார்.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
சிறுவனான சீமானை பார்த்துதான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்ததாக நாதக நிர்வாகி வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With Vennela Thayumanavan, State Head, Environment Wing, NTK
Phone Conversation With Britto, Editor, Vikatan
X post by Junior Vikatan, dated July 15, 2025
X post by Vikatan, dated July 17, 2025
Ramkumar Kaliamurthy
September 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
September 2, 2025
Ramkumar Kaliamurthy
August 26, 2025