சனிக்கிழமை, செப்டம்பர் 28, 2024
சனிக்கிழமை, செப்டம்பர் 28, 2024

HomeFact Checkபணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று பேசினாரா ராகுல் காந்தி?

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று பேசினாரா ராகுல் காந்தி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது – ராகுல் காந்தி

Fact: வைரலாகும் வீடியோவில் அவர் அவ்வாறு பேசியிருக்கவில்லை.

பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று ராகும் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..
அது என்னனா…..”பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது” – இப்படிக்கு வடமாநில ஸ்டாலின்”
என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from x @SanghiPrince

X Link/Archived Link

Screenshot from x @snakiee_2026

X Link

Screenshot from X @praveen_kgl

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட வீடியோ ராகுல் காந்தி உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த மே 13ஆம் தேதியன்று காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மகளிருக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி மாதாமாதம் பணம் வழங்குவோம். அதனை உபயோகித்து நீங்கள் பொருள் வாங்கும்போது நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்க நேரும். இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்” என்பதாகப் பேசியிருந்தார்.

இதனையே, தவறாக மொழிபெயர்த்து அவர் பணத்தை அச்சடித்து தருவதாகக் கூறியதாகப் பரப்பி வருகின்றனர்.

Also Read: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

பணத்தை அச்சடித்து மக்கள் எல்லோருக்கும் வழங்குவேன் என்று ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Indian National Congress, Dated May 13, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular