Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹோத்ரா ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படங்கள்.
வைரலாகும் படங்கள் எடிட் செய்யப்பட்டவையாகும்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி ஹரியானாவை சார்ந்த ஜோதி மல்ஹோத்ரா எனும் டிராவல் யூடியூபருடன் சேர்த்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் “ஹரியானாவிலிருந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பிடிபட்ட ஜோதி மல்ஹோத்ரா, ராகுல் காந்தியுடன் இருக்கிறார். ஒவ்வொரு துரோகியும், தேச விரோதியும் ராகுல் காந்தியுடன் காணப்படுவது என்ன ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு! நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு ராகுல் காந்தி மூளையாக செயல்படுகிறாரா?” என்று குறிப்பிட்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹோத்ரா ராகுல் காந்தியுடன் இருப்பதாக இரண்டு படங்கள் பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முதல் படத்தை முன்னதாக Fake Image Detector இணையத்தளம் மூலம் பரிசோதித்தோம். அச்சோதனையில் இப்படம் எடிட் செய்யப்பட்டது என பதில் வந்தது.

இதனையடுத்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் உத்திரப்பிரதேசத்தின் ரே பரேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அதிதி சிங் ராகுல் காந்தியுடன் இருக்கும் படமே மேற்கண்டவாறு எடிட் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. ராகுல் காந்தியும் அதிதி சிங்கும் இருக்கும் படம் டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டிருந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதுத்தவிர்த்து வேறு சில ஊடகங்களிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்
உண்மையான படத்தையும், அதிதி சிங்கின் முகத்திற்கு பதிலாக ஜோதி மல்ஹோத்ராவின் முகம் மாற்றப்பட்டு எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


இரண்டாம் படத்தையும் Fake Image Detector இணையத்தளம் மூலம் பரிசோதித்தோம். அதில் இப்படம் எடிட் செய்யப்பட்டது என பதில் வந்தது.

இதனையடுத்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் ராகுல் காந்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 18, 2022 அன்று பாரத் ஜோடோ யாத்ராவில் பொதுமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்ததையும், அப்படங்களில் ஒன்றாக மேற்கண்ட படத்தின் உண்மையான படம் பகிரப்பட்டிருப்பதையும் கண்டறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஊடகங்களிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
உண்மையான படத்தையும், பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்துக்கொண்ட பெண்ணின் முகத்திற்கு பதிலாக ஜோதி மல்ஹோத்ராவின் முகம் மாற்றப்பட்டு எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Also Read: இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹோத்ரா ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படங்கள் எடிட் செய்யப்பட்டவையாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Deccan Herald, dated October 3, 2019
Facebook post from Rahul Gandhi, Leader of the Opposition of Lok Sabha, dated September 18, 2022
Fake Image Detector Tool
Vijayalakshmi Balasubramaniyan
November 14, 2025
Ramkumar Kaliamurthy
August 27, 2025
Runjay Kumar
August 20, 2025