Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினார்.
Fact: வைரலாகும் வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். ராஜீவ்காந்தி நாதகவில் இருந்தபோது பேசிய வீடியோவே அண்மையில் பேசியதாக பரப்பப்படுகின்றது.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் இது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் ஈபிஎஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் இதை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என்று கேள்வியெழுப்பி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.கிர்ந்து உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்றதை விமர்சித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் “வைகோவிற்கு சிறைத் தண்டனையா – கொதித்த சீமான்!” – ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சி” என்று தலைப்பிட்டு ஆதன் தமிழ் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஜூலை 06, 2019 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
மொத்தம் 31 நிமிடம் 42 நொடிகள் இருக்கும் இவ்வீடியோவில் 17:19 நேரத்தில் ராஜீவ்காந்தி பேசிய பேச்சே இப்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்த நேர்காணல் வெளிவந்தபோது ராஜீவ்காந்தி நாதகவில் இருந்தார்; திமுகவில் இல்லை.
இதனையடுத்து தேடுகையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததாக ராஜீவ்காந்தி அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் ராஜீவ்காந்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாதகவில் இருந்தபோது பேசிய பேச்சை அண்மையில் பேசியதாக தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?
கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். அண்மையில் உதயநிதி துணை முதல்வரானதற்கு எதிராக இதை அவர் பேசவில்லை. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video from Aadhan Tamil, Dated July 06, 2019
X post from Rajiv Gandhi, Student Wing, President, DMK, Dated September 30, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 23, 2024
Ramkumar Kaliamurthy
December 2, 2024
Ramkumar Kaliamurthy
November 29, 2024