Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக்
வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேக்கர் ஆவார்.
கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்.” என்பதாக இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று பரவும் புகைப்படச்செய்தி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட ஆர்.சி.கோடேகர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்.சி.கோடேகரின் பேட்டி ANI பக்கத்தில் வெளியாகியிருந்தது.
அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்திலும் குறிப்பிட்ட அரசு வழக்கறிஞர் புகைப்படம் பல்வேறு சமூக வலைத்தளப்பக்கங்களில் தவறாக ரஃபீக் உசேன் பதுக் என்று பரப்பப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு ANI சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் உசேன் பதுக் கடந்த 19 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.சி.கோடேகர் அளித்த பேட்டியின் புகைப்படமே ரஃபீக் உசேன் பதுக் என்பதாக பரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2024ல் ஆர்.சி.கோடேகர் தரப்பில் சைபர் கிரைமில் அவரது புகைப்படம் ரஃபீக் உசேன் பதுக் என்று பரவுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 04, 2022 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் ரஃபீக் உசேன் பதுக்கின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய ரஃபீக் உசேன் பதுக் என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, ANI Bharath, Dated July 03, 2022
Report from, Hindustan Times, Dated July 04, 2022
Report From, TOI, Dated Februry 10, 2024
Vijayalakshmi Balasubramaniyan
August 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
September 17, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 21, 2024