வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckReligionபிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் கைது
Fact: வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்

“கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை… முஸ்லீம்களுக்கு மாத்திரை கலக்காத பிரியாணி சப்ளை. விற்பனை செய்த முஸ்லீம் கடைக்காரர்கள் கைது” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook/hindu.solai
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook/appasnishaan
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screenshot from Facebook/Alwan Pakshi

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இத்தகவல் குறித்தும், தகவலோடு சேர்த்து பரப்பப்படும் புகைப்படங்கள் குறித்தும் ஆய்வு செய்தோம்.

அதில் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பதும், அப்புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்களில் எடுக்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

படம் 1: காவல்துறையினரின் பத்திரிக்கை சந்திப்பு
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

உத்திரப்பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் மதராஸாவில் வைத்து ஆயுதங்கள் கடத்தியதற்காக ஆறு பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். இதுக்குறித்து பிஜ்னோர் போலீசாரின் டிவிட்டர் பக்கத்தில் ஜூலை 11, 2019 அன்று புகைப்படங்களுடன் டிவீட் செய்யப்பட்டிருந்தது. அப்படங்களில் ஒன்றாக வைரலாகும் இப்படமும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.  

படம் 2: பிரியாணியுடன் இருக்கும் முஸ்லீம் நபர்
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

இப்படம் Videosmylive எனும் யூடியூப் பக்கத்தில் ‘Indian Muslim festival DUM BIRYANI Preparation for 30 People & STREET FOODஎன்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த வீடியோவுக்கு தம்ப்னைலாக வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவாவானது ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன்பு ஜூலை 01, 2016 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screengrab from Youtube/Videosmylive
படம் 3: மாத்திரைகள்
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

இலங்கையில் தந்தை, மகன் இருவர் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை கடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வானது 2019 ஆண்டு மே மாதத்தில் நடந்துள்ளது. இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே வைரலாகும் தகவலுடன் பரப்பப்பட்டு வருகின்றது.

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screengrab from Daily Mirror

தொடர்ந்து தேடுகையில் இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது.

Also Read: Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?

Conclusion

கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Dinamalar, Dated May 21, 2023
Tweet from @bijnorpolice, Dated July 11, 2019
Youtube video from Videosmylive, Dated July 01 2016
Report from Daily Mirror, Dated May 02, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular